வியாழன், 27 மே, 2010

வாலிபால் விளையாடும் நம் ஊர் வாலிபர்கள் நான் உட்பட..! (சஞ்சய்காந்தி)

ஒரு மழைக்காலம்.........!

Arial View...... பழஞ்சூர்

முக்குளம்...!

முக்குளமும், நடு நிலை பள்ளியும்...........

சனி, 1 மே, 2010

பழஞ்சூர்
என் கிராமத்தின் இனியவர்களே ! நம்மிடையே எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், பொருளாதரத்தில், கல்வி நிலையில், வேலை வாய்ப்பில், சாதியம் ரீதியிலான எல்லாவற்றைவிடவும் நாம் பிறந்த புண்ணிய பூமி என்ற வகையில் நாம் பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று கூறுவதில் நம்மிடையே பெருமை நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்.

நீண்ட நாளைய என்னுடைய கனவாக இருந்த வலைபூ வடிவமைப்பு இப்பொழுது சத்தியப்பட்டதில் சந்தோசமடைகின்றேன்.

நமது கிராமத்தைச் சேர்ந்தவர்களில் விரல்விட்டு எண்ணக் குடியவர்களே சாதித்திருக்கிறார்கள் (அல்லது) சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள், எனக்கு ஒரு பேருந்து பயணத்தில் அறிமுகமான பிரமான பெரியவர் ஒருவர் என்னிடம் நமது கிராமத்தின் பெயரைக் கேட்டார், நான் சொன்னேன் பழஞ்சூர் என்று, அவர் பதிலுக்கு முருகேசனார் ஊரா? என்றார், சத்தியமாக அப்பொழுது எனக்கு தெரியாது முருகேசனார் பற்றி அதே போல இன்னும் அரசியலிலும், கல்வித்துறையிலும், வியாபாரதுறையிலும், ஏன் கடல் கடந்தும் நமது கிராமத்தின் பெயர் நல்ல பரிட்சயமானது.

நமிடையே எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், நம்மைப் பற்றிய சுய மதிபிடு என்று ஓன்று நிட்சயம் உண்டு, அதே போலே நமது கிராமம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எப்பொழுதாவது சிந்திதிருப்போம்,அது என்ன? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அதே போல் உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கலாம், நமது கிராமத்தின் தோற்றம் பற்றி, வரலாற்றைப் பற்றி, கோவில்கள் பற்றி, என்று உங்களுக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்துகொள்ள இந்த வலைபூ- வை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன், நீங்கள் பகிர்ந்துக்கொள்ளுவதன் மூலம் எதிகாலத்தில் நமது கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகைக்கான முடியும் என்று நம்புகிறேன், எதிகால தலைமுறைக்கு நல்லவற்றை அல்லது அவர்கள் அறிவை விசாலாமக்க முடியும், என் குடும்பம், என் உறவு, ஏன் சாதி என்ற நிலையில் இருந்துக்கொண்டே இன்னுமொரு தளமாக என் கிராமம் என்பதனை கொள்வோம், நமக்கான ஒரு விவாத களம் அமைப்போம், கூடி விவாதிப்போம், நம்முடைய கருத்துக்களை பகிர்வோம், நம்மால் முடிந்தால், அரசியல், சாதிய சாயம் பூசப்படாத ஒரு புதிய கிராமத்தினை எத்தகைய கலாட்சார சிரளிவுகளுக்கும் இடம் தராது கட்டியமைப்போம், உங்களிடையே நமது கிராமத்தின் எந்த தளத்திலிருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் என்பனவற்றை இந்த தளத்தில் வெளியீட்டு உறவுகளை, நட்புகளை வளர்ப்போம்.

இன்னும் எழுத காத்திருக்கிறேன் நண்பர்களே ! இந்த முயற்சி எனது கருத்தை திணிக்கும் முயற்சியல்ல, நமது கருத்தை பகிரும் முயற்சியே ! எனக்கு தெரிந்தவர்களை நாம் மின்னஞ்சல் முலம் தொடர்புகொள்கிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நமது கிராமத்தின் நண்பர்களுடன் உறவுகளை பேணுங்கள். அவர்களின் கஷ்டங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள், ஒரு புதிய முயற்சிக்கு கை கொடுத்து உதவுங்கள், நல்ல முயற்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம், தொடரலாம், காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்களை அறிய..........

என்றும் நட்போடு...
உங்கள் காசிநாதன் சஞ்சய்காந்தி
பழஞ்சூர்

E-mail: sanjaibcom@yahoo.com
















“உண்ணுவது உறங்குவது

வாழ்க்கையென்றால்

அதை மண்ணும் செய்யும்; மரமும் செய்யும்

நீ மனிதன் சாதித்தே ஆகவேண்டும்”.

--
By.
C.Rameshkumar




Hi
How are you.how is your job going on there.i think you are in abroad but i dont knoe exactly .i saw your website in blogspot.com .you done a good job .iam very happy to see this.iam very proud of u.how is your family members.if you need any technical help in your website construction ask me defenately iam willing to help u.because i am also haveing the same thought .i have planed to get a place in yahoo and design the website usefuly like(all tamil news paper and maps and some futures).we will discus about later.

ok bye takecare.keep your health.

eat well ,sleep well,always keep enjoy

thanks & regards

G.Rajaram