ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம் - THANKS TO DINAMANI

First Published : 06 Feb 2011 12:55:59 PM IST

பட்டுக்கோட்டை, பிப். 5: பட்டுக்கோட்டை அருகேயுள்ள பழஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.விழாவுக்கு பழஞ்சூர் ஊராட்சித் தலைவர் துரை. இளங்கோ தலைமை வகித்தார்.

செஞ்சிலுவைச் சங்க மாநிலப் பயிற்றுநர் எஸ். கணபதி சுப்பிரமணியன், ஒன்றிய அமைப்பாளர் பிச்சைமணி ஆகியோர் பேசினர். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியை ர. ஞானாம்பாள் வரவேற்றார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜி. அருள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக