சனி, 23 மார்ச், 2013




வெள்ளி, 1 மார்ச், 2013

பழஞ்சூர் புதிய புகைப்படம்










புதன், 14 நவம்பர், 2012

எங்க ஊருக்கு வாரிங்களா .............?











 
 பழஞ்சூர் நண்பர்கள்

திங்கள், 19 டிசம்பர், 2011

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஒவ்வொரு உயிரிலும் கடவுள்

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.
விவேகானந்தர்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம் - THANKS TO DINAMANI

First Published : 06 Feb 2011 12:55:59 PM IST

பட்டுக்கோட்டை, பிப். 5: பட்டுக்கோட்டை அருகேயுள்ள பழஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.விழாவுக்கு பழஞ்சூர் ஊராட்சித் தலைவர் துரை. இளங்கோ தலைமை வகித்தார்.

செஞ்சிலுவைச் சங்க மாநிலப் பயிற்றுநர் எஸ். கணபதி சுப்பிரமணியன், ஒன்றிய அமைப்பாளர் பிச்சைமணி ஆகியோர் பேசினர். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியை ர. ஞானாம்பாள் வரவேற்றார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜி. அருள் நன்றி கூறினார்.

திங்கள், 10 ஜனவரி, 2011

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்
தலைநகரம் : தஞ்சாவூர்
பரப்பு : 3,602.66 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,205,375
எழுத்தறிவு : 1,490,568 (76.07%)
ஆண்கள் : 1,0191,557
பெண்கள் : 1,113,818
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 931



பெயர்க்காரணம்:

தஞ்சாறை (ஆறை- அரண்) தஞ்சம் அடைந்தவர்களுக்கு அரணாக விளங்குவது என்னும் பொருளில் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு:

தஞ்சை மாவட்டம் பிற்கால சோழ மண்டலத்தின் முக்கியப் பகுதியாக விளங்கியது. காவிரியால் வளம் கொழிப்பதால் இதைப் பாடாத இலக்கியங்களே இல்லை என்று எண்ணும் அளவிற்கு புகழ் பெற்றது. தமிழகத்தின் ஒரே பேரரசான சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னரே திகழ்ந்தது. பல்லவர்களின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் தஞ்சையை ஓர் நகராக்கி ஆண்டவர்கள் முத்திரையர்களே ஆவர். பிற்கால சோழராட்சியைத் தொடங்கி வைத்த விஜயலாய சோழன் முத்திரையர்களை வென்று தஞ்சையை தலைமையிட மாக்கியபின் கிட்டத்தட்ட சோழராட்சி 429 வருடங்கள் இருந்ததை யாரும் மறக்க முடியாது. சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், பின்னர் செல்லப்ப நாயக்கர், சேவப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகியோரால் ஆளப்பட்டது; 1675 இல் மராட்டியர் கையில் விழுந்தது. சரபோஜி காலத்தில் வெள்ளையர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பொது விவரங்கள்:

தஞ்சை மாவட்டத்தின் தலைநகர் தஞ்சாவூர். இதன் பரப்பு: 3,602,86 ச.கி.மீ; மக்கள் தொகை: 21,38,845; பள்ளிகள்: 1558; கல்லூரிகள்: 30; பல்கலைக் கழகம்: தமிழ் பல்கலைக் கழகம்; ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினி ஆறு, அரசலாறு. காவிரி, கொள்ளிடம்; மழையளவு: சராசரி 102 மி.மீ; சாலை நீளம்: 2021.2 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள்: 18,556; மருத்துவமனைகள் 21; வங்கிகள் 224; தொலைபேசிகள்: 21,997; திரையரங்குகள் 98. எல்லைகள்: கிழக்கில் நாகை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்; தென்மேற்கில் வங்காள விரிகுடா; மேற்கில் புதுக்கோட்டை; வடக்கில் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள்.

உள்ளாட்சிகள்:

நகராட்சி-3; தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம்; ஊராட்சி ஒன்றியங்கள்-14, சட்டசபை தொகுதிகள்: 9; பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர்; நாடாளுமன்ற தொகுதி-1, தஞ்சாவூர்.

வழிபாட்டிடங்கள்:

தஞ்சாவூர், குடந்தை, சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், திருநாகேசுவரம், ஒப்பிலியப்பன் கோவில், பூண்டி மாதா கோவில், வளத்தூர் மசூதி, திருவையாறு ஐயாறப்பர் கோவில், மாரியம்மன் கோவில்.

திருவிழாக்கள்:

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் குடந்தையில் நடைபெறும். தஞ்சையில் இராசராசனின் சதயத் திருநாள்; முத்துப் பல்லாக்கு; மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு, பொங்கல், கார்த்திகை, திருவையாரில் சப்தஸ்தானம், தியாகராஜ ஆராதனை முதலியன.

சுற்றுலாத் தலங்கள்:

தஞ்சை, குடந்தை, தாராசுரம், திருவிடைமருதூர், திருவையாறு, ஒரத்தநாடு, மனோரா மற்றும் சோழர்கள் கோயில்கள் உள்ள திருப்பனந்தாள், புள்ளமங்கை முதலிய ஊர்கள்.

தஞ்சை தந்த செல்வங்கள்:

வரலாற்றுக்கால பெருமக்கள்:

சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், கம்பர், சேக்கிழார், நாட்டிய இசைக் கலை வளர்த்த தஞ்சை நால்வர்களான பொன்னையாபிள்ளை சகோதரர்கள். கரிகாலன் வரலாற்றை எழுதிய உலகநாத பிள்ளை, தமிழ் வரலாறு எழுதிய சீனிவாசம் பிள்ளை; கருணாமிருத சாகரம் தந்த ஆபிரகாம் பண்டிதர்; ஏடு எடுத்து தந்த ஏந்தல் இரட்டை குடை இரகுநாத ராஜாளியார்; கரந்தை தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்வேள் உமா மகேஸ்வரம் பிள்ளை; நாடகமணி நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை; தமிழ் இலக்கியங்களை பதிப்பித்த உ.வே. சுவாமிநாதய்யர்; தஞ்சை மாவட்ட சேர்மன் பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை; பூண்டி வாண்டையார்; உக்கடை தேவர் முதலியோரை தஞ்சை மக்கள் மறப்பதில்லை. எழுத்தாளர்களில் வடுவூர் துரைசாமி, ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு முதலியோர்.


தஞ்சாவூர்:

தஞ்சாவூர் என்றதும் நினைவிற்கு வரக்கூடியது பெரிய கோவில்தான். இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் 'பெருவுடையார் கோவில்' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. தஞ்சைக் கோவிலின் விமானம்தான் தென்னிந்தியாவிலேயே உயரமானது. ஏறத்தாழ 190 அடி கோவிலின் மேல்தளம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்டது. இங்குள்ள லிங்கமும் பெரியது; நந்தியும் பெரியது. தமிழகத்தில் வேறெங்கும் இவ்வளவு பெரிய அளவு சிற்பங்கள் கிடையாது. ஒரே கல்லாலானவை இவை. கருவறைக் கோபுர நிலைகளின் உள்ளே ஆடவல்லான் ஆடிய 108 கரணங்களில் 81 மட்டும் செதுக்கப்பட்டுள்ளது. மற்றவை செதுக்க இடம் விடப்பட்டுள்ளது. இதன் சுற்றுச் சுவர்களில் 10-ஆம் நூற்றாண்டு சோழர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. சோழர் காலத்திற்கு பின்னர் நாயக்கர் காலத்தில் பிள்ளையார், முருகன் கோவில், அம்பாளுக்கான தனிக் கோவில், நந்தி மண்டபம் முதலியவை கட்டப்பட்டன. கோவிலே கோட்டை போல காணப்படுகிறது. கோவிலைச் சுற்றி அகழி இருக்கிறது. அகழிக்கு ல்லணைக் கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது.

சிவகங்கைப் பூங்கா:

கோவிலை ஒட்டி சிவகங்கைப் பூங்கா இருக்கிறது. இது ஒரு அழகான பூங்கா. இங்கு சிறு விலங்குகள், பறவைகள் உள்ளன. பூங்காவைச் சுற்ற இரயில், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், மற்ற விளையாடும் இடங்கள் உள்ளன. உள்ளே சிவகங்கைக் குளம் என்ற பெரிய குளம் இருக்கிறது. இதன் இடையே செல்ல டிராலி ரயில் இருக்கிறது.

அரண்மனை:

சோழர் கால அரண்மனை அழிந்த பிற்பாடு, நாயக்கர் காலத்தில் கருடன் பறப்பது போன்ற வடிவத்தில் ஓர் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. அரண்மனையினுள் முதலில் நுழைந்தவுடன் நம் கண்ணில் படுவது கூட கோபுரமும், மாட மாளிகையும்தான். அதற்கடுத்து சங்கீத மகால். இந்த சங்கீத மகால் இசை, நாட்டிய சாத்திர அளவுகளுக்கு ஏற்றபடி கட்டப் பட்டுள்ளது. எங்கிருந்து பாடினாலும் ஒலி ஒரே மாதிரி இருக்கும்! இந்த கட்டிடத்தின் அருகிலேயே குளம் போன்ற பகுதியில் தண்ணீரை கட்டித் தேக்கி விடுவார்களாம். மகாலில் மேளக்கட்டு ஒரே மாதிரி இருப்பதற்கு இதுதான் காரணம் என்று இசைதமிழ் விற்பன்னர் சுந்தரேசனார் சொல்லுவார்.

கலைக்கூடம்:

அரண்மனையின் ஒரு பகுதி கலைக்கூடமாகும். இதன் வழியாகவே நாம் கூட கோபுரம், மாடமாளிகையிலும் ஏறிக் காண முடியும். இக்கலைக்கூடம் இராஜராஜ சோழன் கலைக்கூடம் என அழைக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள சோழர்கால கோவில்களில் சிதைந்தவற்றை தொகுத்து இக்கலைக்கூடம் உருவானது. இது உருவாக அக்கால மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த டி.கே. பழநியப்பன், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், இராமச்சந்திர பத்தர் முதலியோரே காரணகர்த்தாக்கள். இங்குள்ள சிற்பத் தொகுதிகளில் மிகப் பெரிய பிரம்மா, இரண்டாம் இராசராசன் சிற்பம், கஜசம்கார மூர்த்தி, விஷ்ணு, புத்தர், மகாவீரர், அய்யனார், சப்தமாதர்கள், பிஷாடனர், போன்ற சிற்பங்கள் மறக்க முடியாதவை. ஒரு பகுதி, மிகப்பெரிய மகாலில் ஐம்பொன் சிற்பத் தொகுதிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சோழர்கால செப்புத் திருமேனிகளின் கைவண்ணத்தைப் பார்த்து ரசிக்காத மக்களே கிடையாது. இம்மகாலின் நடுவே சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட சரபோஜியின் கம்பீரமான சிலை கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி மகால் :

யானைக் கட்டும் கட்டுத்தறிக்கு எதிரே சரஸ்வதி மகால் இருக்கிறது. சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' என்ற நூல் நிலையமே பின்னர் வந்த மராட்டியர் களால் செழுமைபடுத்தப்பட்டது என்று ஆய்வாளர் வேணுகோபால் தெரிவிக்கிறார். முதலில் நம்மை வரவேற்பது மராட்டியர் கால ஓவியமான சரஸ்வதி. உள்ளே நுழைந்தவுடன் இராமர் பட்டா பிஷேக ஓவியம். வலது பக்கம் உள்ள அறையில் இருப்பவை அனைத்தும் சரபோஜியின் சேமிப்பு. 18ம் நூற்றாண்டு ஓவியங்கள், நூற்கள், தேசப்படங்கள், அகராதிகள், மராட்டிய மொழியில் உள்ள ராமாயணம், தெலுங்கு ராமாயணம் முதலியவை. இடது புறத்தில் சரபோஜியால் தொகுக்கப்பட்ட பல மொழி புத்தகங்கள் இதுதவிர வடமொழி, தமிழ், தெலுங்கு, மராட்டிய ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றிலிருந்து பலவற்றை தேர்வு செய்து புத்தகங்களாக சரஸ்வதி மகால் நூல் நிலையம் வெளியிட்டு வருகிறது. 16,000 ஓலைச்சுவடிகளாகவும், 24,000 காகிதச் சுவடிகளாகவும் உள்ளன.

தர்பார் ஹால்:

தஞ்சையின் தர்பார் ஹால், மதுரை நாயக்கர் மகாலின் சிறிய தோற்றம் போல காணப் படுகிறது. அரசர் அமரும் இடத்தின் பின்புறம் சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம் வரையப்பட்டுள்ளது. மந்திரிபிரதானிகள், படையினர், முதலியோர் இருக்கும் இடம் அழகாக காணப்படுகிறது. தர்பார் ஹாலின் இட, வலப்புற மாடங்களில் ராணிகள்/பெண்கள் இருந்து கொண்டு அரசவையின் நிகழ்ச்சிகள் காணும் இடங்கள் அழகாக அமைக்கப் பட்டுள்ளன.

அரண்மனையின் மையப் பகுதியில் கூட கோபுரம் இருக்கிறது. எட்டடுக்கு உள்ள கோபுர வடிவிலான மாடி அமைப்பு மேலே போகப் போக குவிந்து கொண்டே செல்கிறது. இதன் மேலிருந்து 10 கி.மீ. வரை தெளிவாக பார்க்க முடிகிறது. இது போலவே மாடங்கள் உள்ள மாளிகையும் மேலே ஏறுவதற்கான படிக்கட்டு அமைப்பும் அழகாகவும், கட்டட தொழிற் நுட்பத்தைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதற்கடுத்து கிழக்கு வாசல் வரும் வழியையும், ராஜா உயர்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் உயர்நிலைப் பள்ளியும், திடல்களும் விளையாட்டு மைதானங்களும் கோட்டைக்குள்ளே அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ராஜா உயர்நிலைப் பள்ளியின் மேல் பகுதி. அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு விளையாட்டுக்களை காணக்கூடிய அழகான கட்டடக் கலை.

பீரங்கி மேடு:

கோட்டையிலிருந்து வெளியே செல்வதற்கான வடக்கு வாசல், கிழக்கு வாயில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு வாசலின் இடதுபுறம் உள்ள மேட்டில் பீரங்கி காணப்படுகிறது.தமிழகத்தில் வேறு எங்குமே காணமுடியாத 'நிலைபீரங்கி' இங்கு மட்டும்தான் காணப் படுகிறது. இதன் அளவு மிகப்பெரிய அளவுடையது. வெடிமருந்தை முழுவதும் இடித்து விட்டு, பீரங்கிக்கு கீழேயுள்ள கிணற்றிலிருந்து வெடிதிரியை கொழுத்தும் அமைப்பு காணப்படுகிறது.

அகழி:

ஊரைச் சுற்றி பெரிய அளவு அகழியை இன்றும் காணலாம். அகழியின் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகள் மண்மேடிட்டு சாலைகள் போடப்பட்டு விட்டன. சிவகங்கைக் குளம், சாமந்தன் குளம், சேவப்ப நாயக்கன் ஏரி, தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோவில் வரை செல்லும் ஏரி போன்றவை நாயக்க, மராட்டிய கால நீர்நிலை தேக்க அமைப்பின் அழகைப் பறைசாற்றுகின்றன.


தமிழ்ச் சங்கம்:

தஞ்சையின் வடக்கே 2 கி.மீ. தொலைவில் கரந்தட்டாங்குடி இருக்கிறது. கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது. கோட்டையின் அகழியை அடுத்து வெளியில் உள்ள ஊர் இது. இங்கு 1911 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றிற்கு இச்சங்கம் பல்வகையில் பணியாற்றியுள்ளது. இதன் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் வழக்கறிஞர் தமிழவேள் உமாமகேசுவரனார் ஆவார். பல காலமாக 'தமிழ் பொழில்' என்ற செந்தமிழ் மாத இதழை இச்சங்கம் நடத்தி வருகிறது. புலவர் தேர்வு நடத்தி பல புலவர்களைச் சங்கம் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்குப் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கோர்: கரந்தை கவியரசு வேங்கடாசலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், நீ. கந்தாமி பிள்ளை, பேரா. பாலசுந்தரம், வரலாற்றறிஞர் சீ. கோவிந்த ராசனார் முதலியோர் ஆவர். சங்கத்திற்கு வராத தமிழ் அறிஞர்களே கிடையாது. கரந்தை செப்பேட்டை கண்டுபிடித்து சங்கம் பாதுகாத்து வருகிறது. 'யாழ்நூல்' கண்ட விபுலானந்தருக்கு உதவி செய்து நூலை சங்கம்தான் வெளியிட்டது. இந்தி போரில் கலந்து கொண்ட போராட்ட வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தது. தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது இடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பிடித்திருக்கிறது.

முக்கிய இடங்கள்:

திருவையாறு:

இவ்வூர் தஞ்சையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் காவிரி சூழ அமைந்துள்ளது. காவிரி ஐந்தாறாக பிரிந்து இவ்வூரிலிருந்து செல்கிறது. அதனால்தான் ஐயாறு என்று அழைக்கப்படுகிறது. அப்பர், ஞானசம்பந்தர் முதலிய சைவ பெரியார்களின் பாடல் பெற்ற தலம். அதனால் இங்குள்ள கடவுளுக்கு ஐயாறப்பர் என்பது பெயர். இதையே பிற்காலத்தில் பஞ்சாபகேசர் என்று வட மொழியில் மொழிபெயர்த்து விட்டனர். இங்குள்ள கோவில் ஆதித்த கரிகாலன் ஆட்சியில் கட்டப்பட்டது. இக்கோவிலில் சோழர், நுளம்பர், நாயக்கர், மராட்டிய கால கட்டடக் கலையின் பணியினைக் காணலாம். திருவையாறு ஆற்றங்கரை மண்டபம் கல்யாண மகால், இசைக்கல்லூரி போன்ற இடங்களில் மராட்டியர் கால கட்டிடக் கலையை ரசிக்கலாம். திருவையாற்றில் ஆயிரம் ஆண்டு காலமாக 'சப்தஸ்தானம்' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவையாற்றை சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய் தானம், திருவையாறு ஆகிய ஊர்களின் கடவுள்கள் ஒன்றாகக் கூடி ஏழு ஊர் சுற்றி வரும் விழாவாக நடக்கிறது.

தியாகராஜ ஆராதனை:

திருவாரூரில் பிறந்த தியாகராஜர் திருவையாறில் வாழ்ந்தார். பொதுவாக பிராமணர்களுக்குச் சமாதி வைப்பது கிடையாது. இங்கு அவருக்கான சமாதியை அமைத்தவர் அவரது பக்தையான பெங்களூர் நாகரத்தினம்மாள் ஆவார். தியாகராஜ கீர்த்தனைகள் முழுவதும் தெலுங்கு பாடல்களால் ஆனது. ஆனால் அவர் பாடல்களில் கையாண்ட இசை மரபுகள் தேவாரம், தமிழக நாட்டுப் பாடல்களில் உள்ளவற்றிலிருந்து பெற்றிருக்கிறார் என்பதை பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார்; சரசுவதி மகால் தெலுங்கு புலவர் விஸ்வநாதன் முதலியோர் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் தியாகராசரின் தெலுங்கு பாடல்களை ஆந்திரர் போற்றுவது கிடையாது. ஏனெனில் அதில் தமிழகத் தெலுங்கு மரபு இருப்பதுதான் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் காவிரிக் கரையில் 'தியாகராஜ ஆராதனை'யில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடுவது மரபாக இருந்து வருகிறது.

தாராசுரம்:

தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கும்பகோணத்திற்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தின் நுழைவாயிலாக இவ்வூர் விளங்குகிறது. இங்கு இரண்டாம் இராசராசன் காலத்திய கோவில் அழகுற கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் நந்தி மண்டபத்திற்குப் பின்புறம் இசைப்படிக்கட்டுகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் முன்மண்டபத் தேரை யானைகள் இழுத்துச் செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. தூணில் பல்லர் பாணி, சோழர் பாணி தூண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் வேலைப்பாடு மிகுந்த சிற்பத் தொகுதிகள் காணக்கிடைக்கின்றன. ஓர் அங்குல பிள்ளையார், நந்தி முதலியன இருக்கின்றன. கற்களை சிற்பமாக்கிய பின் வழவழப்பாக மெருகேற்றும் பாணி பிற்கால சோழர் சிற்பங்களில் இருப்பதை இங்குள்ள கண்ணப்ப நாயனார் சிலையில் பார்க்கலாம். சரபமூர்த்தி சிலை, லிங்கோத்பர், தட்சிணாமூர்த்தி போன்றவை காணத்தக்கவை. இது தவிர பெரிய புராணக் காட்சிகள் வலப்புறம், இடப்புற வாயிற் கதவுக்கு அருகில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரகாரங்களின் கீழ் பகுதியில் இராமாயணக் காட்சி அழகுடன் வடிக்கப்பட்டுள்ளது. இடதுபுற மூளையில் பல்வேறு விதமான கல் சன்னல்களைக் காணலாம். அதன் கீழ்புறம், 4 உடல் ஒரு தலையுள்ள பெண்ணின் நடனம், கர்பிணிப் பெண்ணின் நடை முதலிய சிற்பங்கள் காணத்தக்கன. வில்வ மரத்தடியில் கீழ் யானை- காளை சிலை உள்ளது. இதில் தலையை மறைத்தால் ஒன்று மற்றதாகும் விந்தையைக் காணலாம். அதற்கு மேலுள்ள படிக்கட்டில் ஏறிப்பார்த்தால் 63 நாயன்மார்களின் சிலைகளும் சுவரில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு அக்கால தமிழ் எழுத்துக்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கை வரலாறும் கீழே வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களை ஒரே நேர்க்கோட்டில் பார்க்கும் போது பரவசம் ஏற்படுவது இயல்பு. இதனால்தானோ தாராசுரத்தை 'சிற்பக்கலைகளின் கூடம்' என்று அழைக்கின்றனர்.

கும்பகோணம்:

அப்பர், ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பழைய நகரம். இவ்வூரை தேவாரம் குடமூக்கு, குடந்தை கீழ்கோட்டம் என்று அழைக்கிறது. இங்கு கும்பேஸ்வரர், நாகேஸ்வரர் போன்ற சைவக் கோவில்களும், சக்கரபாணி, சாரங்கபாணி, இராமசாமிக் கோவில் முதலிய வைணவக் கோயில்களும் இருக்கின்றன. முன்னிரண்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. வைணவர்களின் 108 திருப்பதிகளில் இவ்வூரும் ஒன்றாகும். குடந்தை சாரங்கபாணிக் கோவிலில் கோபுரச் சிற்பங்களும், பரதநாட்டியத்தை உணர்த்தும் 108 கரணச் சிற்பங்களும் தேரும் காணத்தக்கவை. இராமசாமிக் கோவில் இரகுநாத நாயக்கன் திருப்பணி பெற்றது. மன்னரின் அழகான சிலையை இங்கே காணலாம். இது தவிர கொடிப் பெண்; பிரகாரத்தில் உள்ள இராமயண ஓவியம் இவையும் காணத்தக்கவை. திருநாகேசுவரர் கோவிலே பழமை வாய்ந்தது. பிரகாரத்தில் உள்ள சோழ அரச, அரசிகளின் சிலை உயிர்பெற்ற ஓவியம் போல கண்முன் தோன்றும் அழகை வியக்காதவர் இல்லை.

பட்டீஸ்வரம்:

தாராசுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் உள்ளது. சோழரின் கருவறை இருந்த பழையாறைக்கு இது அருகில் இருக்கிறது. கோவில் பல சுற்றுக்களைக் கொண்ட பெரிய கோவில். சோழர் கால துர்க்கையை இங்கு காணலாம். நாயக்கர் கால ஓவியங்களைக் காணலாம். நாயக்கரின் பிரதானி. கோவிந்த தீட்சதரின் சிலை இங்குள்ளது.

சுவாமிமலை:

தஞ்சையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. முருகன் திருத்தலமாக இருந்து வருகிறது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவலஞ்சுழி உள்ளது. இங்கு மூலவரே கணபதிதான். இப்பெரிய கோவிலில் 17ம் நூற்றாண்டு ஓவியங்களைக் காணலாம்.

திருபுவனம்:

இது தஞ்சையிலிருந்து 44 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது குலோத்துங்க சோழனின் திருப்பணி. திருவிடை மருதூர்: குடந்தைக்கு இவ்வூர் அருகில் உள்ளது. இங்கு நாயக்கர் கால திருப்பணியைக் காணலாம். சுதை சிற்பங்கள், ஓவியங்கள், போன்றவையும், வீதி அழகும் காணத்தக்கவை. திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள மானாம்பாடியில் சோழர்கால கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளது. இதுபோலவே தஞ்சைக்கு அருகில் உள்ள பசுபதி கோவிலுக்கு அருகில் உள்ள புள்ளமங்கையில் முற்கால சோழர்களின் சிற்பங்களைக் காணலாம்.

மனோரா:

இது சரபோஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். மினார் என்னும் முஸ்லீம் பாணி உயர்ந்த கோபுரம்; அகழி சூழ்ந்து காணப்படும் கோட்டை, கடற்கரை அருகில் உள்ளது. சேதுபாவா சத்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாகும். இக்கோட்டையுள் ஆங்கிலம், தமிழ், மராட்டிய மொழிகளில் உள்ள கல்வெட்டு கூறுகிறது: ஃபிரெஞ்சு அரசன் போனபர்ட்டேவை ஆங்கிலேயர் வென்றதை குறிக்கும் முகமாக கட்டப் பட்டதாக கூறுகிறது.


வேளாண்மை:

2000 ஆண்டு காலமாக தஞ்சை மாவட்டத்து மக்கள் வேளாண்மையை சிறப்பாக செய்து வருவதை இலக்கியங்கள் பேசுகின்றன. கல்லணை ஒன்றே இதற்கான சான்றாகும். "சோழநாடு சோறுடைத்து" என்ற கூற்று இதனால்தான் உருவானது. இன்றும் தஞ்சைதான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. மூன்று போகம் விளைந்து வந்த தஞ்சை, இன்று காவிரி நீர் குறைப்பால் 2 போகமே நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் மிகப் பெரிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. விவசாயத்தின் சாகுபடி பரப்பு: 2,56,247 ஹெக்டெர். இதில் நெல் சாகுபடி மட்டும் 2,29,079 ஹெக்டேர். விவசாயத்தை மட்டும் சார்ந்திருப்போர் 4,70,735 பேர்கள். உற்பத்தியாகும் நெல்லை சேமிக்க உதவும் மிகப் பெரும் கிடங்குகள் அந்தந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர அம்மன் பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையின் மூலம் அரிசியாக மாற்றப்படுகிறது.

வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள்:

நெல் விதையின் தரம், நேர்த்தி இவற்றை ஆய்வு செய்யும் நிறுவனங்களை ஆடுதுறை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு முதலிய இடங்களில் அரசு நிறுவியுள்ளது. நெல்லைத் தவிர வாழை 4784 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 9013 ஹெக்டேரிலும், பருத்தி 1585 ஹெக்டேரிலும் விளைகிறது.

பட்டு நெசவு:

தஞ்சை மாவட்டத்தில் பட்டு நெசவு தாராசுரம், திருபுவனம், அம்மாப்பேட்டை, முதலிய இடங்களில் பெருமளவு செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் குடந்தைதான் முன் நிற்கிறது. ஆண்டுக்கு ரூ.150 கோடி மதிப்புடைய 7.5 இலட்சம் பட்டுப்புடவைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு இதன் மூலம் 25000 தொழிலாளிகள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 7.5 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்க பார்டர் என்பதே குடந்தை பட்டின் தனித்தன்மை.

தொழில் வளர்ச்சி:

தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மைதான் முக்கியத் தொழில். அதனால் வேளாண்மையை சார்ந்தே பிற தொழில்கள் வளர்ந்தன. இன்றும்கூட வேளாண்மையை அடிப்படையாக வைத்துத் தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

தஞ்சை:

தஞ்சாவூரில் டான்டெக்ஸ் உள்ளாடைகள் தொழிற்சாலை உடை தேவையை நிறைவு செய்கின்றன. தஞ்சாவூர் சர்க்கரை ஆலை, பெல் மெட்டல் யூனிட், ஈகான் மேக்கிங் லிமிடெட் போன்ற தொழிற்சாலைகளும், தஞ்சையை சுற்றிக் காணப்படுகின்றன. காகித பொம்மை தயாரித்தல், மெட்டி வேலை, இசைக்கருவிகள் தயாரித்தலும் முக்கிய கைத்தொழில்கள்.

கும்பகோணம்:

மைதீன் புகையிலை, தங்க விலாஸ் புகையிலை என்ற 2 பெரும் தொழிற்கூடங்களும், ஏ.ஆர்.ஆர். சீவல், பாக்கு, சுண்ணாம்பு தொழிற்கூடமும் பல தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வருகிறது. காளீஸ்வரி எவர்சில்வர் தொழிற்கூடம் போன்று பல சிறு தொழிற் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது. 100க்கு மேற்பட்ட சாக்பீஸ் தொழிற்சாலைகள் உள்ளன. பாரம்பரியமாகவே நகை வேலைகள், மளிகை, பித்தளை பாத்திரங்களுக்கான மொத்த சந்தையாக குடந்தை விளங்கி வருகிறது. மெழுகு திரி, பவர்லைட் சோப், உமி எண்ணெய் தொழிற்சாலை போன்றவையும் இங்கு உள்ளது. கும்பகோணமும், சுவாமிமலையும் சிற்ப வேலை செய்யும் தொழிலுக்கு புகழ் பெற்ற இடங்களாகும்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையைச் சுற்றி தென்னை நிறைந்து காணப்படுகிறது. அதனால் இங்கு கயிறு தொழிற்சாலை மற்றும் தேங்காய் எண்ணெய் எடுக்கும் தொழிலும் நடைபெற்று வருகிறது. இவ்வூர் பிரமுகர்கள் வி.நாடிமுத்துப்பிள்ளை, அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வானோலி குமாரவேல், நடிகர் விஜயகுமார், ராஜேஷ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பேராவூரணி:

பேராவூரணி வட்டத்தில் 85 பெருங் கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களுக்குப் பேராவூரணியே மையமாக இருப்பதால் வணிக முக்கியத்துவம் மிகுந்து காணப்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னந் தோட்டங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கும். அதனால் இளநீர், தேங்காய், கொப்பரை, மட்டை, போன்றவற்றின் துணைத் தொழில்களாக, கீற்று முடைவது, மட்டையிலிருந்து கயிறு திரித்தல், கொப்பரை, காயவைத்து தேங்காய் எண்ணெய் ஆட்டுவது போன்ற தொழில்கள் பேராவூரணியைச் சுற்றி நடைபெறுகிறது. தேங்காய் பவுடர் செய்யும் தொழிற்சாலை உள்ளது. குழல் விளக்கில் உபயோகப்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சோக் என்கின்ற சாதனத்தை 'ஓபல்' என்ற பெயரில் தயாரிக்கும் எலட்ரோஸ்டிரீக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் இயங்கி வருகிறது. மீன் பிடி வலை செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது. இவ்வூரைச் சார்ந்த பெருமக்கள்: முன்னாள் அமைச்சர் கோவேந்தன், காங்கிரஸ் தியாகிகள் வைரத்தேவர், வைரவன் சேர்வை, குருவிக்கரம்பை வேலு, கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், ஏ.கே. சுப்பையன்.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி:

இந்த இரண்டு ஊர்களை உள்ளடக்கிய கிராமங்களிலிருந்து தான் தஞ்சைக்கு காய்கறி, வாழை இலை, பூ, தண்டு, காய் முருங்கைக் கீரை, அகத்துக்கீரை, வெற்றிலை முதலியவை சந்தைக்கு மொத்த வியாபாரத்திற்கு செல்கின்றன. காவிரி பாயும் இப்பகுதி மிகுந்த வளமானதால் ஆண்டு முழுவதும் வேளாண்மை தொடர்ந்து நடந்து வருகிறது.

பாபனாசம்:

1910 ஆம் ஆண்டு முதல் தனிவட்டமாக திகழ்கிறது. இவ்வட்டத்தில் 104 பெரிய கிராமங்கள் உள்ளன. ஏடு தேடிய ஏந்தல் உ.வே. சாமிநாதய்யர் பிறந்தது இங்குள்ள உத்தமதான புரத்தில்தான். தமிழிசை வாணர் சிவன் பிறந்தது பாபநாசத்தில்தான். இவ்வூர் கோவிலில் 108 லிங்கங்கள் உள்ளன. பாபநாசம், அய்யம்பேட்டை, பண்டாரவடை என்ற மூன்று பெரிய ஊர்களிலும் முஸ்லீம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இம்மூன்று ஊர்களிலும் நல்ல வண்டல்மண் கொண்ட செழிப்பான நெல் விளையும் பகுதிகள் ஆகும். இப்பகுதியிலிருந்து தஞ்சை சந்தைக்கு தினமும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரத்த நாடு:

இப்பகுதி 99 கிராமங்களைக் கொண்டது. 1954 முதல் தனிவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வேர்க்கடலை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 'கல்சவுக்கம்' வேலைப்பாட்டோடு காணப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி உழூர், கண்ணந்தங்குடி, பாப்பா நாடு, தென்னமநாடு போன்றவை உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பெருமக்கள் பாப்பா நாடு ஜமீன்தார், மலையப்பன் ஐ.ஏ.எஸ்.; எல். கணேசன், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், தோழர் சிவராமன் முதலியோர்.

மீன்பிடிப்பு:

அதிராம்பட்டினம் சாளுவநாயக்கன்பட்டினம், சேதுபாவாசத்திரம், அம்மிணி சத்திரம் போன்ற ஊர்களில் மீன்பிடிப்பு முக்கிய தொழிலாகும். இங்குப் பிடிக்கப்படும் மீன்களும் உள்நாட்டில் மிகுந்த வரவேற்பிருக்கிறது. கருவாடுக்கும் இவ்வூர்கள் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. உப்பளத் தொழில் பெருமளவு நடந்து வருகிறது.

அதிராம்பட்டினம்:

இங்கு மேட்டூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ரசாயன முறையிலான உப்பு தயாரித்தல் நன்கு நடந்து வருகிறது.

செங்கிப்பட்டி:

இங்கு 'காசநோய் பிரிவை' மருத்துவர்கள் பார்க்கும் செங்கிப்பட்டி சானிடோரியம் அமைந்துள்ளது.

திருப்பனந்தாள்:

குடந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஊர். மடத்திற்குச் சொந்தமான செந்தமிழ்க் கல்லூரி பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் இலவசமாக தந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

திருவாடுதுறை:

திருவாடுதுறை மடம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்குதான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ் கற்பித்து வந்தார். அவருடைய மாணவரே உ.வே. சாமிநாதய்யர். பழைய கால குருகுலக் கல்வி முறையில் மடத்திலேயே தங்கி, உணவு வுண்டு படித்தவர் உ.வே.சா. மடத்தின் வாயிலாக 100க்கும் மேற்பட்டநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல கொடைகள் நிறுவப்பட்டுள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்:

தமிழக அரசால் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொழி, இலக்கியம் பற்றிய ஆய்வுகள் செய்து அவற்றை வெளியிடுவது; கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகள் அவற்றை புத்தகமாக வெளியிடுவது; கலைக் களஞ்சியம் தயாரிப்பது; தமிழ்ப் பண்பாட்டை உலகு உணர்த்தும் வண்ணம் ஆய்வு; அருங்காட்சியகம் அமைத்தல்; உலகத் தமிழர்களுடன் உறவு அமைத்தல் அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இப்பல்கலைக்கழகம் ஆற்றி வருகிறது. மிகப்பெரிய நூலகம் இங்கு அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு இங்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

கலை வளர்க்கும் தஞ்சை:

உழவுத் தொழில் வளமாக நடந்ததால் மற்ற நேரங்களில் கலை வளர்வதற்கு தஞ்சை மக்கள் மிகுந்த ஊக்கம் அளித்ததால் இங்கு ஆடல், பாடல், நாடகம், கல்வி, கலை, கைத் தொழில்கள், நாட்டுப்புறக்கலைகள் முதலியவை பெருமளவு வளர்ந்து இன்று தமிழகம் முழுவதற்குமான கலைஞர்களை அளித்துள்ளது.

கலைகள்:

கோவிற்கலைகள்:

தஞ்சை, குடந்தை, மானம்பாடி, தாராசுரம், திருவிடைமருதூர், புள்ளமங்கை, திருவையாறு முதலிய இடங்களில் கோவில்கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலியவை பெருமளவு வளர்ந்துள்ளதை இங்கு காணலாம்.

இசை:

தமிழிசை மும்மூர்த்திகளான அருணாசல கவிராயர் (1711-78) முத்துத் தாண்டவர் (1560-1670); மாரிமுத்தாப்பிள்ளை (1712-87) பிறந்தது பழைய சோழ மண்டலம்தான். தெலுங்கிசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள் (1767-1847); முத்துசாமி தீட்சதர் (1775-1834), சியாமா சாஸ்திரிகள் (1762-1827) இவர்கள் பிறந்தது சோழமண்டலம்தான். தெலுங்கிசை எவ்வாறு தமிழிசையை அப்பட்டமாகக் கவர்ந்து வளர்ந்தது என்பதையும், அவ்விசைக்கு இசை இலக்கணம் சரியாக அமையவில்லை என்பதையும் கண்டிபிடித்த ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய 'கருணாமிருதசாகரம்' தஞ்சையில் தான் உருவானது. 'யாழ்நூல்' இயற்றிய விபுலானந்தர் அந்நூலை தஞ்சை கொள்ளாம்புத்தூரில் தான் அரங்கேற்றினார். பதிப்பித்தது கரந்தை தமிழ்ச் சங்கம். இது தவிர வாய்ப்பாட்டில் வல்லவர்களும் இங்குதான் தோன்றினார்கள். தமிழிசைச் கருவிகளான நாதசுரம், தவில், மிருதங்கம், வீணை முதலியன இங்கு செய்யப்படுகின்றன. நாதசுர சக்கரவர்த்தி திருவாடுதுறை இராஜரத்தினம், திருவிடைமருதூர் வீராசாமிபிள்ளை, வலங்கை மான் சண்முகசுந்தரம் முதலியோர் சாதனையாளர்கள். பிடில் இராஜமாணிக்கம் பிள்ளை புகழ் வாய்ந்த் கலைஞர். வயலினை கர்நாடக இசையில் பயன்படுத்தியவர் தஞ்சை நால்வர்களில் ஒருவரான வடிவேல்பிள்ளை ஆவார். ஆங்கிலேய பேண்ட் வாத்தியமும் இங்குதான் முதன்முதலில் நம்மூர் விழாவில் வாசிக்க ஆரம்பித்தனர். வீணை தனம்மாள், தாகூர் முன்பு வாசித்துப் புகழ் பெற்றவர்.

நடனம்:

ஆடவல்லானின் அழகான செப்புத் திருமேனிகளை சோழநாடு முழுவதும் காணலாம். 108 கரணங்களில் 81 கரணங்கள் சிவபெருமான் ஆடுவது போல தஞ்சையில் உள்ள சிற்பங்களும், சாரங்கபாணிக் கோவில் சிற்பங்களும் பரதத்திற்கு எடுத்துக் காட்டுடாக இருக்கின்றன. தமிழகம் தவிர பரத முத்திரைக் காட்டும் சிற்ப தொகுதிகள் வேறு மாநிலத்தில் கிடையாது.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தஞ்சை நால்வர்களான பொன்னையா, சிவானந்தம், சின்னையா, வடிவேலு ஆகியோரே சதிராக இருந்த நடனக் கலையை புதிய பாணிகளைச் சேர்த்து பரதத்திற்கு புத்துயிர் ஊட்டினர். பரத பள்ளிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்திரையைப் பார்க்கலாம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வழுவூர் இராமய்யா பிள்ளை போன்ற புகழ்பெற்ற நட்டுவனார்கள் பல பள்ளிகளையும், நடன மணிகளையும் உருவாக்கினார்கள். தஞ்சை மரபில் வந்தவர்தான் தஞ்சை பால சரஸ்வதி அம்மையார். இவர் உலகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பற்றிய திரைப்படம் சத்யஜித்ரேயால் எடுக்கப் பட்டுள்ளது.

நாடகம்:

இராஜராஜன் காலத்திலேயே பெரிய கோவிலில் நாடகமாடி வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 'இராஜராஜவிஜயம்' என்ற நாடகம் பெரிய கோவில் நாடக மேடையில் அக்காலத்தில் நடந்ததாம். சரபோஜி காலத்தில் 'சபோஜி பூபாலா குறவஞ்சி' இக்கோவிலில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை இங்கு பல நாடகங்கள் நடித்துள்ளார். சங்கரதாச சுவாமிகள் இங்கிருந்த 'கல்யாணராமய்யர்' நாடக மன்றத்தில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து குடந்தை வாணிவிலாச சபை, தஞ்சை சுதர்சன சபை, குமார கான சபை போன்றவை தோன்றின. இங்குதான் எம்.ஜி.ஆர். சக்ரபாணி, சாரங்கபாணி, காளி என். ரத்தினம், பெரியநாயகி முதலியோர் தோன்றினர்.

வியாழன், 6 ஜனவரி, 2011

புதன், 29 டிசம்பர், 2010

கேள்விக்குறியாகும் பட்டுக்கோட்டை புறவழிச் சாலைத் திட்டம் - தினமணி

First Published : 29 Dec 2010 02:56:55 PM IST

Last Updated :



பட்டுக்கோட்டை, டிச. 28: பட்டுக்கோட்டை புறவழிச் சாலைத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுமார் 1 லட்சம் மக்கள்தொகை கொண்ட பட்டுக்கோட்டை நகரில், வருவாய்க் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், பல்வேறு அலுவல் நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பட்டுக்கோட்டைக்கு வந்து செல்வதால், நகர வீதிகளில் பெரும்பாலான நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி வாகன விபத்துகளால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், பட்டுக்கோட்டையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பட்டுக்கோட்டையில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதன்படி, பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் தொடங்கி சூரப்பள்ளம், ஆத்திக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு வரை நிலங்களை கையகப்படுத்தி, 7.33 கி.மீ. தொலைவுக்கு 30 மீட்டர் அகலத்தில் புறவழிச் சாலை அமைக்கவும், இந்தத் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது.

முதல் கட்டமாக அணைக்காடு கிராமத்தில் தொடங்கி பொன்னவராயன்கோட்டை, உக்கடை, பாப்பாவெளி பாளையக்கோட்டை வழியாக ஆத்திக்கோட்டை வரை 4.2 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கவும், 9 மாதங்களில் இந்தப் பணியை நிறைவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த ரூ. 2.78 கோடி, சாலைப் பணிக்கு ரூ. 7.22 கோடி பிரித்தளிக்கப்பட்டது.

இதனிடையே, நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு ஆதரவாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் அமைந்தன.

இதைத்தொடர்ந்து, முதல் கட்டமாக புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், திட்டத்தைத் தொடங்குவது குறித்து சென்னை நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் புறவழிச் சாலைப் பணிகள் தொடங்கும் என்றும் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, பட்டுக்கோட்டை புறவழிச் சாலை திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால், இந்தச் சாலைத் திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, சூரப்பள்ளம் பகுதியில் உள்ள- பட்டுக்கோட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான தென்னந்தோப்பின் பெரும் பகுதி புறவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ளது. எனவே, இதைத் தடுக்கும் வகையில், தொழிலதிபரின் உறவினருக்கு ஆதரவாக புறவழிச் சாலைத் திட்டத்தை சில மாதங்களுக்கு தொடங்காமல் இழுத்தடிக்கும் திரைமறைவு முட்டுக்கட்டை நடவடிக்கைகளில் இந்தப் பகுதி ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், சில மாதங்கள் வரை சாலைத் திட்டத்தை தொடங்காமல் இழுத்தடித்துவிட்டால், அதற்குள் தேர்தல் ஆணையத்தால் பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடும். இதையொட்டி, அரசின் திட்டங்கள் நிறுத்திவைக்கப்படும் வரிசையில் இந்த புறவழிச் சாலைத் திட்டமும் தானாகவே சேர்ந்துவிடும் என்று கருதியே முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு கூறியது:

பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு அரசு அனுமதியளித்தது. இந்தத் திட்டம் எந்தக் காரணங்களுக்காகவும் முடங்கிவிடக் கூடாது.

அதேநேரம், முதல் கட்டமாக அணைக்காட்டில் தொடங்கி ஆத்திக்கோட்டை வரை சாலை அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை.

எனவே, முதல் கட்டமாக ஆலடிக்குமுளையில் தொடங்கி சூரப்பள்ளம் வழியாக ஆத்திக்கோட்டை வரை சாலை அமைத்தால், தஞ்சையிலிருந்து பேருந்துகள், கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் தவிர்க்க முடியும். இதன்மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். இதை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

வியாழன், 25 நவம்பர், 2010

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

தஞ்சாவூர், நவ. 23: மத்திய அரசின் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வு தஞ்சாவூரில் டிச. 1, பட்டுக்கோட்டையில் டிச. 2, கும்பகோணத்தில் டிச. 3 ஆகிய தேதிகளில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

நேர்முகத்தேர்வில் பங்கேற்போர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை பட்டப் படிப்பு. நேர்காணலுக்கு வரும் போது கல்வித் தகுதியின் சான்று மற்றும் குடும்ப அட்டையின் நகல் எடுத்து வரவேண்டும். சென்னை தனியார் நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்றவர்கள் டெலிகாம், பிபிஓ, ஷோரூம், பார்மஸி ஆகிய இடங்களில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.

சனி, 13 நவம்பர், 2010

பட்டுக்கோட்டை தொகுதி

பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) - நெம்மேலி,கீழக்குறிச்சி மேற்கு,கீழக்குறிச்சி கிழக்கு, ஆவைக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுளிக்காடு, கரம்பயம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுதி, ஆலக்குடிமுளை, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், மதுக்கூர், கோபாலசமுத்திரம், பெரியக்கோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, அத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு மன்னங்காடு, துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சி தெற்கு, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரககலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழங்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராமபடிணம், ஏரிப்புறக்கரை மற்றும் ராஜாமடம் கிராமங்கள், மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராமபட்டிணம் (பேரூராட்சி).

தஞ்சாவூர் மாவட்ட முக்கிய தொலைப்பேசி எண்கள்...!!!

DISTRICT OFFICERS


1 Thiru. M.S.SHANMUGAM I.A.S., District Collector 231190
94441-79000

2 Dr.T. SENTHILVELAN,I.P.S., Superintendent of Police 277190 94430-49191

3 Thiru. S. SURESH KUMAR,M.Sc.,M.B.A., District Revenue Officer 230150 94450-00923

4 Thiru. P.DHANASEKARAN Project Director 231190 94432-61190

5 Thiru.M.RATHINASAMY Personal Asst(General) to Collector 230206 9445008150

6 Thiru.S.ANBALAGAN,M.A,Bsc,B.com., Personal Asst(Accounts) to Collector 230121

Ext.206 9442870328
7 Thiru.V.KALIAPERUMAL Personal Asst(Agri) to Collector 230121
Ext 212

97509-69421

8 Thiru.V.VELMURUGAN Personal Asst(Pan.Dev) to Collector 237047
238170 96298-83969


9 Thiru.R.RADHA District Supply Officer 231336 94450-00286

10 Thiru.P.RAMAR,M.A.,DCIM., Deputy Collector
(Colour Television) 230121
277694 94431-03268
11 Thiru.P.RATHINASAMY,M.Sc.,M.Phil., Deputy Collector (Training) 230121
277694 9941306100
12 Thiru.S.SRIMALINI,B.Sc., Special Deputy Collector (Stamps) 230121
272017 98423-84224
13 Thiru.K.RAVIKUMAR Special Deputy Collector (SSS) 230121
277694 94421-90368
14 Thiru.K.Elangovan,B.Com., Special Deputy Collector(Rev.Court)
15 Thiru.N.SAKTHIVEL,M.Sc., Inpection Cell Officer 230121
Ext216 942489082
16 Thiru.A.JAMES CHELLAIAH District Adi Dravida Welfare Officer 230121
230662 9159602885
17 Thirumathi.T.ANBUMANI District Backward Class Welfar Officer 230121
278415 9488626109
18 Thiru.M. RATHINASAMY,B.Com., Asst.Commissioner (Excise) 230121
Ext 208 9865406520
19 Thiru. P. KALAIVANAN,M.A., Project Officer (Mahalir Thittam) 277907 9445034200
20 Thiru.M. TAMILMUNISHA,M.Sc., Project Officer (I.C.D.S) 270050 9842420988
21 Thiru.S.KARTHIKEYAN,M.Sc,Bed., P.A. (Small Savings) 278378 9444342902
22 Thiru.V.VELMURUGAN P.A. (Panchayat Deve)Panagal Building 238170 9629883969
23 Thiru. T.MARUTHAPILLAI,Msc,CGT., Public Relation Officer 230843 9445106434
24 Thiru.M.VELUSAMY P.A. (Noon Meal) 239998 9942378185
25 Thiru. R. NADANASABHAPATHY,M.A., Reginal Manager (Co.Optex) 227494 9442460571
26 Thiru.S.BABU Reginal Transport Officer
Thanjavur
227358 9944883454
27 Thiru.S.BABU Reginal Transport Officer Kumbakonam 2412412 9944883454
28 Thirumathi.S.SHANTHI,MBA., Reginal Director of Municipal Administration 270364 9486655865
29 Thiru.P.RAVEEDREN,Msc,CGT., Revenue Divisional Officer Thanjavur 238033 9445000465
237044
30 Thiru.S.ASHOKKUMAR Revenue Divisional Officer Kumbakonam 2430101 9445000466
2442051
31 Thiru.A.MAIALLAGHAN Revenue Divisional Officer Pattukkottai 237247 9445000467
235046
32 Thiru.MANIKAM Arignar Anna Sugar Mill, Kurungualam 282422 9442518422
282433
33 Thiru.SENTHILVELAN,I.P.S., Supt.Police, Thanjavur 277190 9443049191
34 Thiru.M.THANGARAJU,B.E., Supt. Engineer, TNEB Thanjavur 230661
237448 9443323066
35 Thiru.SATHASIVAM Superintending Engineer, PWD 230133 9994442131
232847
36 Thiru.V.SUGUMARAN Supdtg Engineer, PWD(Building) 230323 9443686071
37 Thiru.B.GODHANDARAMAN Supt. Engineer,TWAD Board Thanjavur 213721
231926 -
38 Thiru. T.PICHAIAH,B.A., Senior Reginal Manager(TNCSC) Thanjavur 235033
231909 9443732305
39 Thiru.A.K.MURUGAN,DME,M.A., Motor Vehicle inspector Transport Unit2 Pattukottai 04373-235944 9443508019
40 Thiru.M. SIVASHANKARAN Special Tahsildar (DRS)Thanjavur 230456
43 Thiru.V.Balu Special Tahsildar (DRS)Orathanadu 04372
233232
44 Thirumathi.V.MANIKAVALLI Special Tahsildar (DRS)Pattukkottai 04373 232049 9442847584
45 Thiru.K.SAKTHIVEL Special Tahsildar (DRS)Peravurani 04373
232456
46 Thiru. N. VEMBAN Special Tahsildar (DRS)Thiruvaiyaru 260248
47 Thiru.S.MADHAVAN Special Tahsildar (DRS)Papanasam 04374
222456
48 Thiru.G.MURUGADOSS Special Tahsildar (DRS)Kumbakonam 0435
2430227
49 Thiru.THAMAIYAN Special Tahsildar (DRS)Thiruvidaimaruthur 0435
2460187
50 SecretaryMarketing Commitee, Thanjavur 223005
51 Spl Tahsildar Land Acqn(NH) Thanjavur to Trichy230889
52 Spl Tahsildar Land Acqn (NH) Thanjavur to Nagapattinam 241180
53 Thiru. SUNDARAVADIVEL Special Tahsildar (Chattiram, Thanjavur 231594 9787379342
54 Thiru.L.PERNART IRUTHAIAYARAJ Special Tahsildar (TNRSP)Thanjavur 231021 9442284267
55 Thiru.K.KAMARAJ Specila Tahsildar (TSunami)Thanjavur 231021 9443806005
56 Thiru.V. VENKATACHALAM Tahsildar, Thanjavur 230456 9445000630
57 Tasildar, Thiruvaiyaru 260248 9445000631
58 Thiru.M.TAMILNATHAN Tahsildar, Orathanadu 233225 9445000632
59 Thiru.V.BOSE Tahsildar, Kumbakonam 2430225 9445000633
60 Tahsildar, Thiruvidaimarudur 2460187 9445000634
61 Tahsildar, Papanasam 222456 9445000635
62 Thiru.S.A.NAGARASU Tahsildar, Pattukottai 235049 9445000636
63 Thiru.SELVARAJU Tahsildar, Peravurani 232456 9445000637
64 Thiru.SETHUMATHAVAN Taluk Supply Officer, Thanjavur -- 9445000287
65 Thiru. SUGUMARAN Taluk Supply Officer, Thiruvaiyaru -- 9445000288
66 Thiru.N. PANEERSELVAM Taluk Supply Officer, Papanasam -- 9445000289
67 Thiru. PANDIAN Taluk Supply Officer, Kumbakonam -- 9445000290
68 Thiru.G.JEYABALAN Taluk Supply Officer, Thiruvidaimaruthur -- 9445000291
69 Thiru.P.MANIMALAN Taluk Supply Officer, Orathanadu -- 9445000292
70 Thiru.V.SWAMYNATHAN Taluk Supply Officer, Pattukkottai -- 9445000293
71 Thiru.C. CHOKKALINGAM Taluk Supply Officer, Peravurani -- 9445000294
72 Thiru.M.BALASURAMANIYAN Asst.Director (Town Panchayat), Thanjavur 234247 9442021381
73 Thiru.SUVAIKIN Asst. Director(Survey) Thanjavur 231045 9443493485
74 Asst.Director(Employment)Thanjavur 237037
75 Thiru.DEVADOSSPONNAIAH Asst. Director (Panchayat)Thanjavur 236258 9443087828
76 Thiru.T. ILAMVALUTHI Asst.Director(Fisheries)Thanjavur 235389 9442448992
77 Thiru.K.RAJAPPA Asst.Director Ex-Servicemen's Welfare,Thanjavur 230104 9629645842
78 Thiru.T.AJISHAKAMATHU Asst.Commissioner(LandReforms)Mayiladudurai 04364-223054 9443491513
79 Thiru.P.CINNAMARUTHU A.D Minies and Minerals, Thanjavur 270905
80 Thiru. S.SUTHARSANAM Assistant Director, Khadi Village, Thanjavur 255486 9842052841
81 Thiru. A. MANOHARAN Administrative Officer (MGMT.B) Sanitorium 221423

221424
9994513406
82 Thiru.SAMY.SIVAGNANAM Admn Officer Saraswathi Mahal Library 234017 9443315189
83 Asst. Commissioner(CT) 274419
84 Thiru. S. SHIVAJI Asst. Commissioner(HR & CE)

Thanjavur
238048 9843177787
85 Thiru. V. GOVINDHARAM Asst. Commissioner(HR & CE) Kumbakonam 0435 2430564 9443548875
86 Thiru.K.Kabilan A.D Tamil Development, Thanjavur 271530 9442187892
87 Thiru.Akambaram Branch Manager TIIC, Thanjavur 230465 9442230310
88 Thiru. K.G. RENGARASU Asst Comm.,(Enforcement) Thanjavur 235123 9944318396
89 Asst. Comm,Tax office-I 274597
90 Thiru.S.CHANDRASEKARAN Asst. Engineer, Auto Moble Workshop 230005 9443549453
91 Thiru.M.VADIVEL B.D.O, Thanjavur 236481 9443865824
92 Thiru.V. LAKSHMANAN B.D.O, Orathanadu 04372

233232
9976276454
93 Thiru.JEEVANATHAM B.D.O, Thiruvaiyaru 260522 9443841620
94 Thiru.V. PARIMALA B.D.O, Budhalur 288451 9942002320
95 Thiru.R.MOHANDOSS B.D.D, Thiruvonam 241451 9942148454
96 Thiru.PERIANAYAKI B.D.O, Papansam 222451 9442852127
97 Thiru. MUTHALAKAN B.D.O, Ammapettai 232426 9976389975
98 Thiru.RATHINAKUMAR B.D.O, Kumbakonam 2410424 9786376016
99 Thiru.R.PREMAVATHI B.D.O, Thiruvidaimaruthur 2460174 9994881393
100 Thiru. RAJAKANNU B.D.O, Sethupavasathiram 232438 9486741150
101 Thirumathi. T.SASIKALA B.D.O, Pattukkottai 252863 9790792934
8056848952
102 Thiru.VAITHIYANATHAN B.D.O, Peravurani 272437 9443433144
103 Thiru.S.GUNASEKAR B.D.O, Mathukoor 260220 9841705015
104 Thiru.V.RAJAM B.D.O, Thirupanandhal 2456424 9487534195
9865735185
105 Thiru.V.KUMAR,Msc,M.Phil,Bed., Chief Educational Officer, Thanjavur 237096 9443363391
106 Thiru.T.NADARAJAN,M.A., Commissioner MunicipalityThanjavur 231021
231553
230554 9443861145
107 Thiru.K.V.BALAKRISHNAN Commissioner MunicipalityPattukkottai 252097
253048 9865207251
108 Thiru.R.POONKODI ARUMAIKAN,B.E., Commissioner MunicipalityKumbakonam 2425419 9443374633
109 Thiru.C.APPADURAI,M.A,Med., Chief Educational OfficeS.S.A., Thanjavur 275161 9788858970
110 Thiru.M.SELVARAJ Bsc(Agri) Deputy Director(Horticulture) Thanjavur 232540 9750969422
9942302547
111 Thiru.K.NAGARAJAN,B.Com., District Liobruary Officer,Thanjavur 278147
230397 9003833619
112 Dr.RAVISHANKAR Dean TMCH Thanjavur 240124 9381518991
113 Dr.AMBUJAM,M.S.MFICS Dean(Medical Supdt)R.M.H. Thanjavur 231221 9360365922
114 Thiru.R.Shanmugasundaram,B.A., District Manager, Thadco 256679 9445029477
115 Thiru.P.Elangovan,M.A., D.C (Commercial Tax) 235221 9445195164
116 Dr.A.MOHAMED JOHN,M.S., Deputy Director,Family Welfare, Thanjavur 230019 9443908752
117 Dr.K.MATHIVANAN,MBBC,DPH,DIH,DML&E Deputy Director (Health), Thanjavur 273503 9443285885
118 Thirumathi.S.LAKSHMI,M.A,Bed., D.S.W.O, Thanjavur 258501 9894787524
119 Thiru.SRIDHAR,Bsc,Bed., District Educational Officer, Thanjavur 230830 9442627830
120 Thirumathi.R.THIRUVALARSELVI,M.A,M.Phil,Bed., District Elementary Education Officer, Thanjavur 273787 9500337694
121 Thiru.M.KARTHIKEYAN,Bsc,Bed., District Educational Officer, Pattukkottai 222980 9751720887
122 PULAVAR.SANTHANATANJAIVANAN,M.A.,Med,M.Phil., District Educational Officer, Kumbakonam 2400408 9486170815
123 Thiru.K.BALASUBRAMANIYAM,B.E., Divisional Engineer, Highways Rural Road, Thanjavur 237201 9443289440
124 Thiru.R.RAJASEKARAN,M.E(NABARD) Divisional Engineer, Highways Rural Road, Thanjavur 278938 9443476007
125 Thiru. N.PERIARAJ,M.E., Divisional Engineer, National Highways, Thanjavur 223087 9443143459
126 Thirumathi. S. POONGUDI,M.E Divisional Manager,TN Pollution Control Board 240558
127 Thiru.V.BALASUBRAMANIYAM Deputy Director(Agri Marketting) Thanjavur 255931 9750969423
128 Thiru.KALIYAMURTHY District Disabled Rehabilitation Officer 236791 9842426393
129 Thiru. K.GOVINDARAJAN District Treasury, Thanjavur 235513
271997 9444820105
130 Deputy Registrar,(Co-operative)Thanjavur 231237
131 Thiru. Nedunjaliyan District Registrar (Registration), Thanjavur 223716 9789537801
132 District Registrar, Kumbakonam 2431375 9789537801
133 District Registrar, Housing Society, Thanjavur
134 Thiru.V.THIRUNAVUKARASU I.F.S., District Forest Officer, Thanjavur 227308 9443153200
135 Thiru.R.REGUNATHAN Deputy Director of Agri Central Seheme 267679 9750969416
136 Thiru.S.RAJKUMAR Deputy Director of State Seheme, Kattuthotam 267679 9750969418
137 Thiru.S.BASKARAN Deputy Registrar(Diary). Thanjavur 236056
138 Thiru.V.KANNAN,M.A., District Manager,TASMAC, Thanjavur 255408 9445029735
139 Thiru.S.KANNAN,B.E., E.Engineer,(PWD)Cauvery Basic Division, Thanjavur 230251 9944571132
140 Thiru.K.NEHRU,B.E., Executive Engineer,(PWD) Vennar Division 271250 9442277751
141 Thiru.PAINTAMILSELVEN,B.E,M.B.A., Executive Engineer,(PWD) Gac, Division 230704 9965588551
142 Thiru.S.NADARAJAN,M.E., Excutive Engineer,(PWD) Agniyar Division Pattukkottai 235995 9865268054
143 Thiru.R.KARUPAIYA,M.E,MIE Executive Engineer,(PWD)Building Maintenance 9442548497
144 Thiru.MOUNASAMY E.Engineer(PWD) Building Constructions Division - -
145 Thiru.R.PARAMASIVAM.B.E., Executive Engineer & A.O.T.N. Housing Board, Thanjavur 227066 9940498958
146 Thiru.C.THIRUNAVUKARASU,B.E., Executive Engineer, Thadco, Thanjavur 255069 9445029514
147 Thiru.G.RAVEENDRAN,B.E,M.B.A,M.S., General Manager. D.I.C. Thanjavur 255318 9994362098
148 Thiru.A.DIVYANATHAN,M.A,MSW,M.Phil., Inspector of Labour, Thanjavur 246354 8870410155
149 Thiru.P.ELANGOVAN,B.A., Labour Officer, Thanjavur 246653 9487334277
150 Thiru.M.PALANIYAPPAN,Bvsc., Joint Director, Animal Husbandry, Thanjavur 230835 9445001134
151 Thiru.P.LOGANATHAN,M.sc(Agri) Joint Director(Agriculture), Thanjavur 267679 9750969400
152 Thiru.K.SIVAJI,M.A,M.Phil,LLB,D.C.M., Joint Registrar, Co-Operative, Thanjavur 231238 9443728099
153 Thiru.A.MOHAMED JOHN,M.S., Joint Director (Medical Service) Kumbakonam 2430501 9443908752
154 Dr.S.VENKATACHALAM,Bvsc., General Manager 255686
255379 9442155380
155 Thirumathi.M.KAVITHA,B.L., Joint Commissioner (HR & CE) Thanjavur 238114 9444034996
156 Thiru.RANGARAJ,B.E.,M.B.A., Managing Director, TNSTC (Transport) Kumbakonam 2403724
2400351
157 Joint Director (Agri) 9750969400
158 Assistant Director (Agri)Ammapettai 9750969411
159 Assistant Director (Agri)Puthalur 9750969402
160 Assistant Director (Agri)Kumbakonam 9750969412
161 Assistant Director (Agri)Madukkur 9750969407
162 Assistant Director (Agri)Orathanadu 9750969404
163 Assistant Director (Agri)Papanasam 9750969410
164 Assistant Director (Agri)Pattukkottai 9750969406
165 Assistant Director (Agri)Peravurani 9750969408
166 Assistant Director (Agri)(QualityControl) 9750969417
167 Assistant Director (Agri)Sethubavasathiram 9750969409
168 Assistant Director (Agri)Thanjavur 9750969401
169 Assistant Director (Agri)Thiruppanathal 9750969414
170 Assistant Director (Agri)Thiruvidaimaruthur 9750969413
171 Assistant Director (Agri)Thiruvaiyaru 9750969403
172 Assistant Director (Agri)Thiruvonam 9750969405
173 Agriculture Officer (Central Seheme) 9750969419
174 Agriculture Officer(QulityControl) 9750969420
175 Agriculture Officer 9750969418
176 Deputy Director (Central Seheme) 9750969416
177 Agriculture Officer 9750969415
178
179 D.D. Harticulture 9750969422
180 D.D. Marketing 9750969423
181 E.E. Agri. Engineer 9750969424
182 J.D.A (Animal Husbandry) 9750969425
183 A.D.A (Farmers Training Center) 9750969426
184 Sericulture 9750969427
185 A.D.A (Fisheries) 9750969428
186 Thiru. ARUMUGAM E.E (R.D) 277027 9443688917
187 Thirumathi. P. DEVADAS POONIAH Ast.Dir of Pts 236258 9443087828
188 Thiru. B.J. REVATHI Asst.Dir. of Audit 236258 9443278853
189 Thiru. VELMURUGAN P.A (Development) 237047 9629883969
190 Thiru. M. VELUSAMY P.A (Noon Meal) 239998 9942378185
191 Thiru. KARTHIKEYAN P.A (Small Savings) 278378 9444342902
192 Thiru. M.M.RAJENDRAN (Huzur Sarishtadar) (PD) 9443544859
193 Thiru. MANIKKAM A.P.O.I (DRDA) 9942111299
194 Thiru.V.KALAISELVAN A.P.O.H (DRDA) 9442545367
195 Thiru.R.SOWRIRAJAN A.P.O (EAS) 9443220036
196 Thiru.NANTHIKESWARAN A.P.O (MLA,MP) 9965568780
197 Thiru. NANEELATHASAN AEE(RD) Thanjavur 9443442263
198 Thiru. M.C. KUMARESAN AEE(RD) Kumbakonam 9443877370
199 Thiru. GANESAN AEE(RD) Pattukkottai 9443220752
200 Thiru.A.P.SUBRAMANIYAN AEE(RD) Orathanadu 9443325470
201 Thiru.P.KANNAN BDO (NREGS) 230253 9442540429
202 Thirumathi. MEENACHI SUNDARI BDO (BIO GAS) 230247 9345639805
203 Thiru.S.PALRAJ Superintendent (General) 9442142139
204 Thiru. S.VIJAYARAGAVAN (B) Superintendent 9442570177
205 Thiru.S.JOHAN KENNADI (A) Superintendent 9443749128
206 Thiru. C.KARTHIKEYAN Project Eng. Kattidamaiyam 9842073704
207 Thiru.GOPAL A.P.O Tsunami 04373-256270 9940027044
208 Thirumathi. INDUMATHI EE (Tsunami) 04373-256270 8870922077
209 Thiru. S.S. SRINIVASAN AO Tsunami 9791109734
210 Thirumathi. K. KALANITHI Asst. Executive Eng. Tsunami 9443072295
211 Thiru. NAKENDRAN Asst. Executive Eng. Tsunami 9486616540
212 Thiru. NAGAIYA AEE Tsunami 9443232373

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மரங்களை வெட்டுங்கள்

மரங்களை வெட்டுங்கள்


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.





மண்ணின் வில்லன்



அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )



நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

















__._,_.___

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தமிழ்நாடு காவல் துறை - தஞ்சாவூர் மாவட்டத்தில் நமக்கு அருகாமையில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள்

24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.

CM Office 044-25672510

Control Room (DGP Office) 044-28447200

IG Central Zone 0431 2333755

DESIGNATION PHONE NOS E MAIL ID

DGP 044-2844 7777

044-2844 7755 phq@tn.nic.in
ADGP L&O 044-2844 7799 adgp_lo@yahoo.com
ADGP Admn. 044-2844 7705 tkrajendran2001@yohoo.com
ADGP Hqrs 044-2844 7706
ADGP Welfare 044-2844 6866 igpwelfare@gmail.com
ADGP - STPC 044-2844 2400 radms2009@yahoo.com/gmail.com
IGP Admn. 044-2844 7709
IGP Technical 044-2844 7776 srilaips@gmail.com/igpts@yahoo.com
IGP Welfare 044-2844 7630 igpwelfare@gmail.com
DIG Admn 044-2844 7712
IG Hqrs. 044-2844 7711
DIG Welfare 044-2844 7630
AIG Admn. 044-2844 7710
AIG Hqrs. 044-2844 6686 aighqrs1@gmail.com


THANJAVUR DISTRICT POLICE OFFICERS CUG MOBILE NUMBERS
DIG Thanjavur 04362 277477


DSP-PATTUKOTTAI PATTUKOTTAI SUB-DIVISION 9445494111


DSP-PEW\PATTUKKOTTAI PROHIBITION OFFICE UNIT 9445494131

DSP-DCRB CRIME RECORD BUREAU UNIT 9445494151

DSP-AR ARMED RESERVE\ITAN 9445494171

DSP-DCB\TAN DIST CRIME BRANCH UNIT 9445494161



INSPECTORS

INSPECTOR PATTUKOTTAI PS 9445494026

INSPECTOR PERAVOORANI PS 9445494027

INSPECTOR ADIRAMPATTINAM PS 9445494028

INSPECTOR MADUKKUR PS 9445494029

INSPECTOR SETHUBAVACHATIRAM PS 9445494031

INSPECTOR THIRUCHITRAMPALAM PS 9445494032

INSPECTOR AWPS\PATTUKKOTTAI 9445494048]


SPECIAL UNITS

INSPECTOR SPECIAL BRANCH (SB) UNIT 9445494035

INSPECTOR DCRB\TAN\UNIT 9445494037

INSPECTOR PCR\UNIT\TAN 9445494038

INSPECTOR O\O.PROHIBITION WING 9445494040

INSPECTOR PEW\PATTUKOTTAI 9445494042



SUB-INSPECTORS


SUB-INSPECTOR-I PATTUKKOTTAI PS 9445494152

SUB-INSPECTOR-III PATTUKKOTTAI PS 9445494154

SUB-INSPECTOR-II PERAVOORANI PS 9445494156

SUB-INSPECTOR-I ADIRAMPATTINAM PS 9445494157

SUB-INSPECTOR-I MADUKKUR PS 9445494159

SUB-INSPECTOR-II MADUKKUR PS 9445494160

SUB-INSPECTOR-I SETHUBAVACHATIRAM PS 9445494162

SUB-INSPECTOR AWPS PATTUKKOTTAI 9445494216


SPECIAL UNITS

SUB-INSPECTOR-I SPECIAL BRANCH (SB) UNIT 9445494176

SUB-INSPECTOR-III SPECIAL BRANCH (SB) UNIT 9445494178

SUB-INSPECTOR-IV SPECIAL BRANCH (SB) UNIT 9445494179

SUB-INSPECTOR-II PCR 9445494184

SUB-INSPECTOR-III PCR 9445494185

SUB-INSPECTOR-I PEW PATTUKKOTTAI 9445494197

SUB-INSPECTOR-II PEW PATTUKKOTTAI 9445494198



Toll Free Numbers

To Report A Crime - Control Room 100

To Report Traffic Violation 103


Ambulance 108

Child Line 1098

Women help Line 1091

Coastal security help Line 1093

Senior Citizen Line 1253

Blue Line 12700

*These emergency numbers are applicable to all commissionerates in Tamil Nadu i.e., Chennai, Chennai Suburban, Trichy, Coimbatore, Madurai, Tirunelveli and Salem.
Anti-Ragging Helpline 1800-180-5522 or 155222
helpline@antiragging.net

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

All of you Please cut and paste to browser and findout your name is there in the Election roll Thanks

sanjai


http://www.elections.tn.gov.in/pdfs/dt21/ac176/ac176159.pdf

சனி, 14 ஆகஸ்ட், 2010

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

First Published : 14 Aug 2010 01:21:03 PM IST

Last Updated :



தஞ்சாவூர், ஆக. 13: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரீஷியன் மற்றும் மோட்டார் ரீவைண்டிங் பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மையத்தின் இயக்குநர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த இலவச பயிற்சி ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நான்கு வாரங்களுக்கு நடைபெறுகிறது. தினமும் பேருந்து கட்டணம், மதிய உணவு, தேவையான பயிற்சிப் பொருள்கள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ள 18 முதல் 30 வயது வரையுள்ள, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இயக்குநர், ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், 4-பக்கிரிசாமி வீதி, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சை-613004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 04362-242377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொழில் பயிற்சி: வேலைவாய்ப்பற்ற இளைஞர், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தொழில் பயிற்சி: வேலைவாய்ப்பற்ற இளைஞர், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

First Published : 14 Aug 2010 01:21:52 PM IST

Last Updated :



தஞ்சாவூர், ஆக. 13: நகர்ப்புற, கிராமப்புறங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெடிமேட் கார்மென்ட்ஸ், சேலை வடிவமைப்பு, கேஸ் வெல்டிங், பி.பி.ஓ. கால் சென்டர், டி.டி.பி. கணினி, மின்னணு பராமரிப்பு, பிளம்பர், நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட தொழில்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 25 பேர் தேர்வு செய்யப்படுவர். நர்சிங் உதவியாளர் பயிற்சி 6 மாதங்களும், பிற பயிற்சிகள் தலா மூன்று மாதங்களும் நடைபெறும். இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் பயிற்சிக்கு வரும் நாள்களுக்கு மட்டும் தினமும் | 25 வீதம் உதவித் தொகையாக அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், வேலைவாய்ப்பு பெற்றுத் தர பயிற்சி நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், 8-ம் வகுப்பு, அதற்கு மேலும் படித்தவராகவும் இருக்க வேண்டும். நர்சிங் உதவியாளருக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த மாதம் 19-ம் தேதிக்குள் திட்ட அலுவலர், மகளிர் திட்டம், சி-5, ராமகிருஷ்ணாபுரம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ குடும்ப அட்டை, கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன் (மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகல்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சனி, 7 ஆகஸ்ட், 2010

உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா?

Wednesday, August 4, 2010VILLAGE ADMINISTRATIVE OFFICER 2010
2653 VACANCIES


உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா?


கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு
மேல்!


வயது:
+2 அல்லது diploma அல்லது டிகிரி படித்த SC / ST /BC /MBC மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை!


விண்ணப்பத்தை எப்படி பெறுவது?
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களில் Rs .30 கட்டி OMR விண்ணப்பம் பெறலாம்!

VAO EXAM கட்டணம் :

SC / ST விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் இல்லை!

பட்டம் படித்த BC /MBC விண்ணப்பத்தாரர்களுக்கு முன்று தடவை இலவசம்!

மற்றவர்கள் கட்டணத்தை தலைமை தபால் நிலையங்களில் ரசீது வாங்கி OMR விண்ணப்பமத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்!

கடைசி நாள் :
20 -08 -2010


FOR DETAILS விசிட்: http://www.tnpsc.gov.in/
VAO எக்ஸாம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !
மத்திய அரசு நிதியில் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி

First Published : 07 Aug 2010 03:37:49 AM IST

Last Updated :


சென்னை, ஆக.6: தமிழகத்தில் 5 கி.மீ. தூரத்துக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளி இருக்கும் வகையில், மத்திய அரசின் நிதியில் புதிய பள்ளிகள் அமையவுள்ளன.

அதற்காக, எந்தெந்த பகுதிகளுக்கு உயர்நிலைப் பள்ளிகள் தேவை என்பதை ஆய்வு செய்யும் பணி இப்போது முனைப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் அதன் இறுதி முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் கல்வித் தேவை உள்ள இடங்களில் புதிய பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

அதன்படி, ஒரு கி.மீ. தூரத்துக்குள் தொடக்கப் பள்ளிகள், 3 கி.மீ. தூரத்துக்குள் நடுநிலைப் பள்ளிகள், 5 கி.மீ. தூரத்துக்குள் உயர்நிலைப் பள்ளிகள், 8 கி.மீ. தூரத்துக்குள் மேல்நிலைப் பள்ளிகள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி கூறியது: தமிழகத்தில் உள்ள சுமார் 63,000 கிராமங்களில் 5 கி.மீ. தூரத்துக்குள் எங்கெல்லாம் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அந்தத் தகவல்களைக் கணினியில் பதிவு செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அனைத்து பணிகளையும் அடுத்த ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முடிவை அடிப்படையாக வைத்து, 5 கி.மீ. தூரத்துக்குள் எத்தனை பள்ளிகள் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு, புதிய பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன என்றார்.